92
“பீடத்தின் மீது நிற்பது சிலையல்ல உயிருள்ள ஆள்! கையில் கறுப்புக் கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறார்!”
இது மதுரையில் நடந்த ஒரு விசித்திரப் போரட்டம்!
மதுரையில் முன்னாள் அமைச்சர் கக்கனின் சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. சிலை தயார். பீடம் தயார். சென்ற ஆண்டு மார்ச்சு மாதம் சிலை திறப்பதாக இருந்தது. அதற்குள் பொதுத்தேர்தல் வந்ததால் சிலை திறக்கப்படவில்லை.
கக்கன் சிலையை நிறுவக்கோரித்தான் இந்தப் போராட்டம்! அரசியல் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கக்கன். அவருக்குச் சிலை வைப்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
இது ஒரு துண்டுச் செய்தியாக இருந்தாலும் கக்கனின் மீது உண்மையான அன்பு கொண்டு கக்கனுக்கு உருவச்சிலை அமைப்பதை விரும்புகிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை நமக்கு விளக்குகிறது. தேர்தலைக் காரணம் காட்டி அச்சிலைத் திறப்பு நின்று போனது.
தேர்தல் முடிந்து டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதல்வர் பொறுப்பேற்றபின்பு. அந்தச் சிலையைத் திறப்பதற்கு ஆணையிட்டார். முந்தைய அரசு முடிவு செய்திருந்த மதுரை நீதிமன்றச் சாலையில் அவர்கள் நிறுவிய அதே பீடத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் 31.8.1997 ஆம் நாள் அச்சிலையைத் திறந்து வைத்தார்.