56

பாசன வசதியைப் பொருத்தமட்டில், உணவு அமைச்சர் அவர்கள் மானிய விவாதத்தின்போது, ‘நாம் அநேகமாகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களை முடித்துவிட்டோம். மத்திய தர மற்றும் சிறிய தர நீர்ப்பாசனத் திட்டங்களை மத்திய சர்க்கார் (அரசு) கொடுக்கின்ற உதவிகளைக் கொண்டு உணவு உறபத்தியைப் பெருக்கும் வகையில் கண்மாய்களை ஆழப்படுத்துதல், மடைகளைச் சரிசெய்தல், புதிய குளங்களை வெட்டுதல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்’.

அந்நிய ஆட்சிக் காலத்தில் சமீன்தாரர்கள் கையில் இருந்த நிலப் பகுதியில் இருந்த குளங்கள் எல்லாம் மேடிட்டுக் கிடக்கின்றன. மடைகள் எல்லாம்கூட சரிவர இல்லை. மத்திய சர்க்கார் உதவியைக் கொண்டும், பஞ்சாயத்து மூலமாகவும், இவற்றையெல்லாம் எவ்வளவு தூரம் செப்பனிட முடியுமோ அவ்வளவு தூரம் செப்பனிட ஏற்பாடுகளைச் செய்து, உணவு உற்பத்தியைப் பெருக்க அரசாங்கம் பாடுபட்டு வருகிறது என்பதை இந்தச் சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று தனது திட்டத்தைச் சட்டமன்றத்தில் தெளிவாக எடுத்து வைக்கிறார் கக்கன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book